‘எம்.ஜி.ஆர் காலத்து ஜரிகை; 6 மாத கால தொடர் வேலை’ – தவெக அரசாணையால் நெகிழும் நெசவாளர்கள்| tamilnadu weavers association about State General Secretary about tvk government GO

Spread the love

தமிழ்நாட்டில் பொங்​கல் பண்​டிகையை முன்​னிட்டு குடும்ப அட்​டை​தா​ரர்களுக்கு ஒவ்​வோர் ஆண்​டும் இலவச வேட்​டி-சேலை தமிழ்நாடு அரசால் வழங்​கப்​பட்டு வரு​கிறது.

புதி​தாக ஆட்​சிக்கு வந்​துள்ள தவெக அரசும் இந்​தத் திட்டத்தைத் தொடர்கிறது. கடந்த வாரம் இதற்கான அரசாணையை வெளியிடப்பட்டிருந்தது.

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய்

தமிழக அரசின் அரசாணை

அதன்​படி 2027 பொங்​கல் பண்​டிகைக்கு ரேஷன் அட்​டை​தா​ரர்​களுக்கு புதிய தரத்​தில் இலவச வேட்​டி, சேலைகள் வழங்​கப்​பட​வுள்​ளன. வெள்ளி மற்றும் தங்க நிற ஜரிகை பார்டர் உடன் 1,77,64,000 சேலைகளும் சலவை செய்யப்பட்ட உயர்தரத்துடன் 1,77,22000 புதிய வடிவமைப்பில் வேஷ்டிகளும் முழுமையாக உற்பத்தி செய்யும் வகையில் நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதற்காக 642 கோடி ரூபாய் திட்டத்தில் முதற்கட்டமாக 300 கோடி ரூபாய் முன்பணமாக ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்திருந்தது.

தவெக அரசின் இந்த அரசாணையை வரவேற்று தமிழ்நாடு நெசவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு நன்றி தெரிவித்து நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *