நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளரும், அக்கட்சியின் தலைவர் விஜய்யின் நெருங்கிய நண்பருமான நடிகர் ஸ்ரீநாத் 1,00,536 வாக்குகளும், தி.மு.க வேட்பாளரும் அமைச்சருமான கீதாஜீவன், 62,805 வாக்குகளும் பெற்றனர். 37,731 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார் ஸ்ரீநாத். த.வெ.க-வினர் பல இடங்களில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் வெற்றியைக் கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து அக்கட்சியின் நிர்வாகிகள் தூத்துக்குடி மாநநகரின் பல்வேறு முக்கிய இடங்களில் வெற்றி வாழ்த்துத் தெரிவித்து டிஜிட்டல் பேனர்களை வைத்திருந்தனர்.

இந்த நிலையில், தூத்துக்குடி வி.இ ரோட்டில் உள்ள புனித அந்தோணியார் கோயில் அருகே வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனரை, காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் கிழித்து சேதப்படுத்திவிட்டு தப்பியோடியுள்ளனர். இது குறித்து த.வெ.க. தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். புகாரின் அடிப்படையிலும், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளின் அடிப்படையிலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.