தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கட சுப்பிரமணி. இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பிரியா முடிவைத்தானேந்தல் மெயின் ரோட்டில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார்.
பிரியாவின் உடன்பிறந்த சகோதரி சுப்புலட்சுமி. கணவர் இறந்ததால் பிரியாவுடன் வீட்டோடு வசித்து வந்தார். இந்த நிலையில், சுப்புலட்சுமிக்கும் அதே ஊரைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கும் இடையே திருமணம் மீறிய உறவு ஏற்பட்டுள்ளது.

முத்துக்குமார் தட்டார்மடம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். பணத்தேவைக்காக முத்துலட்சுமியிடம் இருந்து 20 சவரன் தங்க நகைகளை வாங்கி முத்துக்குமார் அடகு வைத்ததாகக் கூறப்படுகிறது.
இவர்களின் திருமணம் மீறிய உறவு விவகாரம் பிரியாவுக்குத் தெரியவரவே, அவர் இருவரையும் கண்டித்துள்ளார். இந்த நிலையில், தன் அக்காவிடமிருந்து பெற்ற 20 சவரன் தங்கநகைகளை திருப்பித் தருமாறு முத்துக்குமாரிடம் பிரியா கேட்டுள்ளார்.