தூத்துக்குடியில் அ.தி.மு.க ஜெயலலிதா பேரவை சார்பில் கடந்த 8-ம் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”உலகத்திலேயே வறட்சிக்கு நிவாரணம் கொடுத்த ஒரே அரசு அ.தி.மு.க அரசுதான். முதலமைச்சராக இருக்கும் ஜோசப் விஜய் குறுவை சாகுபடி என்றால் என்ன தெரியுமா? டெல்டாவில் ஏற்பட்டிருக்கும் வறட்சி பற்றி தெரியுமா?

அ.தி.மு.கவை நேற்று பிறந்த டவுசர் பையன் அழிக்க நினைக்கிறான். சிரித்தால் கல்யாண வீடு, அழுதால் எழவு வீடு, தியேட்டரில் அழுதால் விஜய் செத்து போயிட்டான் என்று நினைப்பார்கள் அழாதீர்கள் என்றேன்” எனப் பேசினார். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட த.வெ.க.,சார்பில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
அந்தப் புகாரில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து அவதூறாகப் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக தி.மு.க., முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ மார்கண்டேயன், எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில் தற்போது முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.