சேலம் ஸ்பார்டன்ஸ் vs மதுரை பாந்தர்ஸ்-க்கான 11 ஆவது TNPL போட்டி திண்டுக்கல் NPR கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் 20 ஓவர்களுக்கு மதுரை பாந்தர்ஸ் அணி 195 ரன்கள் குவித்திருந்தனர். இரண்டாவதாக இறங்கிய சேலம் ஸ்பார்டன்ஸ் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை கண்டது.
டாஸ் வென்ற சேலம் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. பேட்டிங்கில் களமிறங்கிய மதுரை பாந்தர்ஸ்-ன் தொடக்க வீரர்களான ராம்குமார் மற்றும் மகாதேவனின் பார்ட்னர்ஷிப் 50 ரன்களை எட்டிய போது. பொய்யாமொழி தனது அதிரடியான பவுலிங்கின் மூலம் அந்த பார்ட்னர்ஷிப்பை தகர்த்தெறிந்தார்.

சென்ற ஆட்டத்தில் கோவை கிங்க்ஸ்-க்கு எதிராக ஆடி 121 ரன்கள் குவித்து அதிரடி கிளப்பிய என்.எஸ் சதுர்வேத் இன்றைய ஆட்டத்திலும் அதைச் செய்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும் 5(4) என்ற சொற்ப ரன்களில் கேட்ச் செய்யப்பட்டு வெளியேறினார்.
சித்தார்த் மகாதேவன் 42 பந்துகளுக்கு 60 ரன்களை சிறுக சிறுக சேர்த்து பின் போல்டாகி வெளியேறினார். ஆத்திக் மற்றும் மகாதேவனின் பார்ட்னர்ஷிப் 50(40) என கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. 20 ஓவர் முடிவில் மதுரை பாந்தர்ஸ் அணி 195 என்ற இலக்கை வைத்தது.
பாந்தர்ஸின் பவுலிங்கால் பலம் இழந்தது ஸ்பார்டன்ஸ் !
195 என்ற இலக்கை நோக்கி இறங்கிய சேலம் ஸ்பார்டன்ஸின் தொடக்கம் சூடு பிடித்தாலும் பின் ஏனோ கை நழுவ தொடங்கியது.
ரன் அடித்தே ஆக வேண்டும் என்ற நோக்கம் களமிறங்கிய வீரர்களுக்கு இருந்தாலும், ஒரு வீரரை கூட 30 ரன்களுக்கு மேல் தொட விடாமல் சேலம் ஸ்பார்டன்ஸை தனது நேர்த்தியான பந்து வீச்சின் மூலம் கட்டுக்குள் கொண்டு வந்தது மதுரை பாந்தர்ஸ்.எம்.முகமது-வின் வெறும் 30 ரன்கள் மட்டுமே சிறிது ஆறுதல்.

பின், 20 ஓவர்களுக்கு மொத்த விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்களுக்கு சுருண்டது சேலம் ஸ்பார்டன்ஸ்.
இதன் மூலம் மதுரை பாந்தர்ஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று. பாயிண்ட்ஸ் டேபிலில் 6 புள்ளிகளை பெற்று முதலாவது இடத்தைப் பிடித்தது.
இதில் சிறப்பாக பந்து வீசி 9 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்த ரோஹன் ரவி புத்ரா “மேன் ஆஃப் தி மேட்ச்” பெற்றார் .