தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ளார்.
அவரது நண்பர் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரும் தமிழக வெற்றிக் கழகத்தில் நிர்வாகியாக உள்ளார். இவர்கள் இருவரும் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை வேலை வாங்கி தருவதாக காரில் அழைத்துச் சென்றுள்ளனர்.

ராமநாதபுரம் அருகே ஏர்வாடி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பின்னர் அந்தப் பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர். மயக்கம் தெளிந்து கண் விழித்து பார்த்த போதுதான் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது அவருக்குத் தெரிய வந்துள்ளது.