இது ஜனநாயக படுகொலை இல்லையா ?
தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் அப்பாவு தமிழ்நாடு முதலமைச்சர் விஜயிடம் தனது எக்ஸ் பக்கப் பதிவு மூலம் கேள்வி கேட்டுள்ளார்.
“ஜாதி, மத, ஊழலை ஒழித்து விட்டதாக தம்பட்டம் அடிக்கும் முதல்வரே மயிலாப்பூர், ஸ்ரீரங்கத்தில் உங்கள் வேட்பாளர்கள் யார்? இதில் ஜாதி, மதம் இல்லையா?
திருச்சி கிழக்கு வேட்பாளராக தாங்கள் போட்டியிட்டீர்கள். இதில் மதம் இல்லையா?

தமிழ்நாடு முழுவதும் தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களைப் பார்த்தாலே தெரியும். இதில் ஜாதி, மதம் துளிர்விட்டு செழித்து வளர்ந்திருப்பது தெரிகிறது.
முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்த ஆறே நாளில் எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சியை புஷ்பா பட பாணியில் சோபா செட் மூலம் தன்வசப்படுத்தி பலமுறை ஆட்சியில் இருந்த கட்சியை உடைத்து 25 சட்டமன்ற உறுப்பினர்களைத் தங்களுக்கு சாதகமாக வாக்களிக்க வைத்த தங்கள் செயல் ஜனநாயக படுகொலை இல்லையா ?
இதை யாரும் கேட்கக் கூடாதா? இதுதான் ஊழல் ஒழிப்பா? இது தூய எண்ணம் கொண்ட முதல்வர் செய்யும் செயலா?”
நிதின் நபின் சந்திப்பிற்குப் பிறகு, அண்ணாமலை முடிவு அறிவிப்பு?
‘புதிய கட்சி தொடங்கப் போகிறார்’ என்கிற பேச்சு எழுந்த நிலையில், தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றிருக்கிறார்.
இன்று பாஜகவின் தேசியத் தலைவர் நிதின் நபினை சந்திக்கவிருக்கிறார் அண்ணாமலை.
இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, அரசியலில் தன்னுடைய அடுத்தகட்ட நகர்வு குறித்து அண்ணாமலை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருச்சி கிழக்கில் திருமா போட்டியா?
தமிழ்நாட்டில் திருச்சி கிழக்கு உள்ளிட்ட தொகுதிகளில் இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் போட்டியிட்டு வென்ற தொகுதியான திருச்சி கிழக்கில் விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிடலாம். அதில் வென்றால், அவர் தமிழ்நாட்டு அமைச்சரவையில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிற பேச்சுகள் எழுந்தன.
அந்தப் பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திருமாவளவன், “100 சதவிகிதம் சொல்கிறேன். நான் எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிடமாட்டேன். அதற்கான வாய்ப்பில்லை.
அதனை ஏற்கெனவே முதல்வர் விஜயிடம் கூறிவிட்டேன். அதில் எனக்கு உடன்பாடில்லை. அமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசை இல்லை” என்று கூறியுள்ளார்.

இன்று தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் நடக்கும் முக்கியமான அரசியல் நிகழ்வுகளைத் தெரிந்துகொள்ள இந்த Live Blog-ல் இணைந்திருங்கள்.