தொழிலதிபர் வீரமணி வழக்கு: “20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த பாலியல் சுரண்டல்” – அதிர்ச்சி தகவல்! | It has come to light that businessman Veeramani engaged in sexual exploitation for over 20 years.

Spread the love

பிரபல கிரானைட் தொழிலதிபர் ஆர். வீரமணி (85) சம்பந்தப்பட்ட போக்சோ (POCSO) வழக்கில், 2003-ம் ஆண்டுக்கும் முன்பிருந்தே பல சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம் என்ற திடுக்கிடும் தகவல் சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட மேலும் பல சிறுமிகளின் வாக்குமூலங்கள், சென்னை உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பாலியல் வன்கொடுமை

பாலியல் வன்கொடுமை
சித்திரிப்புப் படம்

ஏழை மற்றும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகளை இலக்கு வைத்து, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் திட்டமிட்ட பாலியல் சுரண்டல் நடைபெற்றிருக்கிறது.

இந்த வழக்கில் முதன்மை குற்றவாளி வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது போக்சோ சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் (IT) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மூத்த காவல் அதிகாரிகளின் தலைமையில் வீடியோ பதிவுடன் நடத்தப்பட்டு வரும் இந்த விசாரணை, போலீஸ் காவல் காலம் நிறைவடைந்ததும் முடிவுக்கு வரும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *