போட்டி தொடங்குவதற்கு முன்பு நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் அஜித்குமார், “முதல்வர் விஜய் தனது பரபரப்பான பணிச் சூழலுக்கு இடையே நேரம் ஒதுக்கி லண்டன் வந்துள்ளார். அவரை மக்கள் முதல்வராக தேர்ந்தெடுத்திருப்பத்து மகிழ்ச்சி.
கடந்த 34 ஆண்டுகளாகத் திரையுலகில் நாங்கள் சக நடிகர்களாக இருந்தோம்.
தற்போது முதல்வர் விஜய் தலைமையிலான அரசு விளையாட்டுத் துறையை ஊக்குவிப்பதற்கு பல முயற்சிகளை எடுத்து வருகிறது.
இப்போது இங்கு அழைப்பை ஏற்று வந்து விளையாட்டை துவக்கி வைப்பதும் மகிழ்ச்சி.
இதுபோன்ற சர்வதேச விளையாட்டு நிகழ்வுகள் இந்தியாவிற்கும், இந்தியாவில் உள்ள நம் அனைவரிடமும் வர வேண்டும் என்பதே எனது மிகப்பெரிய ஆசையாகும்” எனப் பகிர்ந்திருக்கிறார்.