தமிழ்நாட்டுக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதல்வர் விஜய் செப்டம்பர் 10-ம் தேதி அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, முதல்வர் விஜய் ஆலோசகர் விஷ்ணு ரெட்டி உள்ளிட்ட முக்கியப் பிரதிநிதிகளுடன் பிரிட்டன் புறப்பட்டுச் சென்றார்.
இந்தப் பயணத்தின் முக்கிய நிகழ்வாக, பிரிட்டனில் இன்று (செப். 12) நடைபெறும் புகழ்பெற்ற “மிஷெலின் லீ மான்ஸ் கப் சில்வர்ஸ்டோன்’ கார் பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைக்கவுள்ளார்.
இந்திய நேரப்படி இன்று இரவு 9.45 மணி முதல் 11.45 மணி வரை நடைபெறும் இப்போட்டியில், பிரபல நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித் குமார் பங்கேற்பதை அமைப்பாளர்கள் உறுதி செய்துள்ளனர். திரையுலகில் ஆரோக்கியமான போட்டியாளர்களாகப் பார்க்கப்பட்ட விஜய்யும் அஜித்தும், எப்போதும் சிறந்த தனிப்பட்ட நட்பைப் பேணி வருகின்றனர். இந்த லண்டன் நிகழ்வின் போது முதல்வர் விஜய், அஜித்தைச் சந்தித்து உரையாடவுள்ளார் என்ற தகவல் இரு தரப்பு ரசிகர்களிடையேயும் பெரும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.