நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: NCPI அழைப்பால் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு|Parliament Buzz: NCPI Invite Sparks Opposition Walkout

Spread the love

நாளை (ஜூலை 20, 2026) முதல் நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது.

இதையொட்டி இன்று டெல்லியில் அனைத்துக் கட்சி தலைவர்களின் சந்திப்பு நடந்தது.

ஆனால், ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் இருந்து வெளியேறி இருக்கின்றன.

இதற்கு மிக முக்கிய காரணம் – திரிணாமுல் காங்கிரஸ்.

நாடாளுமன்றம்

நாடாளுமன்றம்

ஏன்… என்ன விஷயம்?

கடந்த சட்டமன்றத் தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியை தழுவியதையடுத்து அந்தக் கட்சிக்குள் காட்சிகள் மாறி இருக்கின்றன.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி மீது அதிருப்தியில் இருந்த 20 எம்.பிக்கள் இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியில் (NCPI) சேர்ந்தனர்.

இது மேற்கு வங்கத்தில் உள்ள அங்கீகரிக்கப்படாத கட்சி ஆகும். திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் இந்தக் கட்சியில் இணைந்த பின், இந்தக் கட்சி கவனம் பெற்றது.

இதெல்லாம் சரி… இன்று ஏன் கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளியேறினார்கள் என்று பார்த்தால், இன்றைய கூட்டத்திற்கு NCPI கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததே எதிர்க்கட்சிகளின் கோபத்திற்கு காரணம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *