மாநில அளவில் சிறார் குற்ற வழக்குகள் எண்ணிக்கையில் சத்தீஸ்கர் -266, ராஜஸ்தான்-174, டெல்லி-151, உ.பி-137, கேரளா-92 வழக்குகள் என முதல் ஐந்து இடஙகளில் இந்த மாநிலங்கள் உள்ளன.
கடந்த 2024 -ல் நாட்டில் பதிவான போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை 69,191 ஆகும். அதில், 16 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுமியரின் எண்ணிக்கை 23,497 ஆகும்.

போக்சோ குற்றங்களில் ஈடுபட்ட நபர்களில் 99.6 சதவிகிதம் பேர் சிறுமியருக்கு முன்னரே அறிமுகமானவர்கள். அவர்களின் குடும்ப நண்பர்கள், அண்டை வீட்டினர், வீட்டுப் பணியாளர்கள் அடங்குவர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.