
இந்த நிகழ்வு தூங்குவதற்கு முன்னரே முதல்வர் விஜய், நடிகராக இருந்த போது நடித்த படங்களின் பாடல்கள் ஒளிபரப்பப்பட்டன. இதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் பட்டமளிப்பு விழா துவங்கியது. மாணவர்கள் ஒவ்வொருவராகத் தங்களது பட்டங்களைப் பெற மேடை நோக்கி வந்தபோது, ”நான் தன்னந்தனி ஆளு, நீ ஏளனமா பாரு கொஞ்ச நகுந்தேனா எட்டு கோடி பேரு” என்ற தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பாடல் மிக உரத்த சத்தத்துடன் ஒலிக்கவிடப்பட்டது.
மேடையில் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோர் முன்னிலையிலேயே, த.வெ.க கட்சிப் பாடல் மற்றும் திரைப்பட பாடல்கள் இசைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கட்சி பாடல்கள் ஒலிக்கவிடப்பட்டதற்கு எதிர்க்
கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர