நாமக்கல் மாவட்டம், மணப்பள்ளி ஸ்ரீதங்க முனியப்பன் கோயில்: வழக்குகளில் வெற்றி அருளும் தலம்! | namakkal Manappalli Thanga Muniyappan (Muneeswarar) Temple

Spread the love

இங்ஙனம் தங்கள் வீடுதேடி வரும் சாமியிடம் மக்கள் மனமுருக வேண்டுதல் வைப்பார்கள். வேண்டுதல் பலித்ததும், மறுவருடம் சாமிக்குத் தங்கச் சங்கிலி, மோதிரம், கறுப்புச்சட்டை, வெள்ளிக்காப்பு, இரும்பு வேல், பித்தளையில் இடைமணி, வெள்ளி ஒட்டியாணம் என்று காணிக்கை செலுத்துவது வழக்கம்.

குறிப்பாக குழந்தைப் பேற்றுக்காகவும், நீதிமன்றங்களில் இருக்கும் தீராத வழக்குகளில் தீர்வு கிடைக்கவும், நோய்நொடிகள் நீங்கவும், கொடுக்கல் வாங்கல் பிரச்னைகள் விலகிடவும் முனியப்பனிடம் வேண்டுதல் வைத்து வரம்பெறுகிறார்கள்.

தங்க முனியப்பனை வேண்டிக்கொண்டால், நம்முடைய பணக் கஷ்டம், மனக்கஷ்டம் அனைத்தும் விரைவில் விலகும் என்பது நம்பிக்கை.

மணப்பள்ளி ஸ்ரீதங்க முனியப்பன் கோயில்

மணப்பள்ளி ஸ்ரீதங்க முனியப்பன் கோயில்

எக்காரணம் கொண்டும் முனியப்பன் சாமியைப் பட்டினி போட்டுவிடக்கூடாது. மீறினால் வறட்சி ஏற்படும் என்பது மக்களின் நம்பிக்கை. ஆகவே, தினமும் ஊரில் எது நடக்கிறதோ இல்லையோ, தவறாமல் முனியப்பனுக்கு மாலை சாற்றி, தேங்காய் உடைத்து, வெண்பொங்கல் படைத்துப் பூஜிக்கிறார்கள்.

வானமே கூரையாக அமர்ந்திருக்கிறார் தங்கமுனியப்ப சாமி. ஆகவே, பக்தர்கள் எப்போது வேண்டுமானாலும் அவரைத் தரிசித்து வணங்கிச் செல்லலாம். இந்த முனியப்பன் வேல் கொண்டு ஊரைக் காப்பவர் என்பதாலோ என்னவோ, இந்த ஊரில் கத்தி, அரிவாள்கள் செய்யும் பட்டறைகள் அதிகம் இருக்கின்றன.

கேட்ட வரங்களைக் கொடுக்கும் கண்கண்ட தெய்வமாய்த் திகழும் இந்தத் தங்க முனியப்பனை நீங்களும் ஒருமுறை தரிசித்து வாருங்கள்; உங்கள் வாழ்வையும் ஒளிரவைப்பார் தங்கமுனியப்பன்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *