நெல்லை: இளைஞர் தலை துண்டித்துக் கொலை; விசாரணையில் பகீர்; போலீஸ் குவிப்பால் பதற்றம்; நடந்தது என்ன? | A young man was brutally beheaded and murdered due to a prior enmity

Spread the love

நெல்லை, மணிமூர்த்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர். பெயிண்ட் அடிக்கும் தொழிலாளியான இவர், கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு விஜயலெட்சுமி என்ற மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று மாலை ஊரில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த பாஸ்கர், ஆற்றில் குளிக்கச் செல்வதாகக் கூறிவிட்டு தச்சநல்லூர் பைபாஸ் சாலை நோக்கி தனது பைக்கில் சென்றுள்ளார்.

கொலை செய்யப்பட்ட பாஸ்கர்

கொலை செய்யப்பட்ட பாஸ்கர்

அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 இளைஞர்கள் பாஸ்கரை வழிமறித்து அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தலையைத் துண்டித்துள்ளனர். பின்னர், அவரது தலையை எடுத்துக் கொண்டு 150 மீட்டர் தொலைவில் பாஸ்கர் வீட்டுக்குச் செல்லும் வழியில் உள்ள வாழவந்த அம்மன் கோயில் சந்திப்பில் வீசிவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக தச்சநல்லூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *