`நாளையிலிருந்து கோழி இறைச்சி கிடைக்காதா?’ – கோழி வணிகர்களின் கூட்டமைப்பு சொல்வது என்ன? | The protest regarding the closure of chicken meat shops has been called off.

Spread the love

இக்கோரிக்கையை வலியுறுத்தி, அரசு உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், தமிழ்நாடு முழுவதும் ஒரு வார காலத்திற்கு கோழி இறைச்சி விற்பனையை முழுமையாக நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடப் போவதாக வணிகர்கள் கூட்டமைப்பு எச்சரித்தது. அதைத் தொடர்ந்து, கறிக்கோழிக்கு தீவன கட்டுப்பாடு நெறிமுறைகளை பின்பற்றாததைக் கண்டித்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 31ம் தேதி முதல் கோழி இறைச்சி விற்பனையை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அறிவித்தது. இந்த நிலையில், கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு மற்றும் வணிகர்கள் இடையே உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கறிக்கோழி விற்பனை கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டிருக்கிறது. வழக்கம்போல் நாளை சிக்கன் விற்பனை நடைபெறும் எனவும் தமிழ்நாடு கோழி வணிகர்களின் கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *