நியூயார்க் எம்பயர் ஸ்டேட் 103வது மாடியில் நின்ன ஜோடி! உலுக்கும் முத்த மழை வீடியோ! என்னாச்சு தெரியுமா | What Happened After a Couple Kissed on the 103rd Floor of the Empire State Building?

Spread the love

International

oi-Hema Vandhana

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இளஞ்ஜோடி ஒன்று செய்த சம்பவம்தான் உலகம் முழுவதும் கவனம் பெற்று வருகிறது.. டிரெண்டிங் ஆக வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்துவிடலாம் என்ற மனப்பான்மை இப்போதைய தலைமுறையிடம் பெருகி கொண்டிருக்கிறது.. அப்படித்தான் இந்த ஜோடியும் ஒரு காரியம் செய்யப்போய், இன்று இணையவாசிகளின் கவனத்தை பெற்று வருகிறது. அது என்ன தெரியுமா

அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள எம்பயர் ஸ்டேட் கட்டிடம், 1,454 அடி உயரமும் 102 மாடிகளும் கொண்டது.. அதனால்தான் இது உலக ஃபேமஸாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.. கலைநயமிக்க கட்டிடக் கலைக்கும் இதன் உச்சியிலிருந்து தெரியும் நகரின் அழகிய தோற்றத்திற்கும் பெயர்பெற்ற இது, நியூயார்க்கின் மிக முக்கிய அடையாளமாக திகழ்கிறது.

Empire State Building Couple kiss

எம்பயர் ஸ்டேட் கட்டிடம்

இந்த எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சியில், எந்தவிதமான பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல்,ஒரு இளம்ஜோடி ஒன்று ஏறி நின்று தங்களது காதலை வெளிப்படுத்தி உள்ளனர்.. இந்த விஷயம் போலீசுக்கு தெரிந்து, சம்பந்தப்பட்ட ஜோடியை கைது செய்துள்ளனர்..

காதல் ஜோடி செய்த காரியம்

கைது செய்யப்பட்டவர்கள் ரஷ்யாவை சேர்ந்த 32 வயதான இவான் குஸ்நெட்சோவ், 33 வயதான ஏஞ்சலினா நிகோலாவ் என்பதை நியூயார்க் நகர போலீசார் அடையாளம் கண்டறிந்துள்ளனர்.,. இவர்கள் 2 பேரும், உலகின் மிக உயரமான கட்டிடங்கள் எங்கெங்கே உள்ளதோ, அங்கெல்லாம் ஏறி சாகசம் செய்வதையே வழக்கமாக வைத்திருக்கிறார்களாம்.. அப்படி உயரமான கட்டிடங்கள் மீது ஏறும்போதெல்லாம் எந்தவிதமான கயிறுகளோ, பாதுகாப்பு கவசங்களோ எதுவுமே இல்லாமல் ஏறுவார்களாம்.

அதுபோலத்தான் சுமார் 1,454 அடி உயரம் கொண்ட இந்த எம்பயர் ஸ்டேட் கட்டிடத்திலும் ஏறியிருக்கிறார்கள்.. அதிலுள்ள 103-வது மாடியில் உள்ள பராமரிப்பு கதவு வழியாக இந்த ஜோடி ரகசியமாக நுழைந்துள்ளனர். அங்கிருந்து கட்டிடத்தின் உச்சியிலுள்ள கூர்மையான கோபுரப் பகுதிக்கு பாதுகாப்பு எதுவுமில்லாமல் ஏறியுள்ளனர்.

காதலை வெளிப்படுத்திய ஜோடி

உச்சி கோபுரம் என்பதால் காற்று பயங்கரமாக அடித்துள்ளது.. அப்போதுகூட உச்சியின் நூலிழையில் நின்று கொண்டு, ஒரு பெரிய கருப்பு நிற பேனரை அங்கே விரித்து காண்பித்தனர். அந்த பேனரில் “அன்பின் சக்தி வெல்லும்போது இந்த உலகம் அமைதியைக் காணும்” என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.

அதாவது கோபுரத்தின் முனையை பிடித்துக் கொண்டே இவான் தனது காதலி ஏஞ்சலினாவிற்கு மோதிரம் அணிவித்து தனது திருமணக் காதலை வெளிப்படுத்தியுள்ளார்… இவர்களின் இந்த ஆபத்தான சாகசத்தை கீழே இருந்து பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

உலுக்கும் முத்த மழை வீடியோ

பொதுமக்கள்தான் பாதுகாப்புப் படையினருக்கு தகவல் சொல்லி உள்ளார்கள்.. நியூயார்க் போலீஸார் கட்டிடத்தின் உச்சிக்குச் சென்று அவர்கள் இருவரையும் பத்திரமாக மீட்டுக் கீழே கொண்டு வந்து கைது செய்துள்ளனர்.. அவர்கள் மீது அத்துமீறி நுழைதல், பொதுமக்களுக்கு ஆபத்து விளைவித்தல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்..

தொடர்ந்து இந்த ஜோடி மான்ஹாட்டன் நகர கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி 2 பேருககும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

ஜாமீனில் நீதிமன்றத்தை விட்டு வெளியில் வந்த ஜோடியை பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டார்கள்.. “நீங்கள் இப்போது முத்தமிட விரும்புகிறீர்களா?” என்று ஒரு கேள்வியும் கேட்க, உடனே அந்த ஜோடி அங்கேயே நின்று ஒருவருக்கொருவர் முத்த மழை பொழிந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்த துவங்கி விட்டார்களாம். இதைப்பார்த்து அங்கிருந்த செய்தியாளர்கள் வாயடைத்து போய் நின்றுள்ளனர்.. இந்த வீடியோதான், இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது..!!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *