“நீங்கள் ‘ஆம்’ என்று கூறினால், நான் அரசியலில் நுழையத் தயாராக இருக்கிறேன்”- ராகவா லாரன்ஸ்

Spread the love

நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதளப்பக்கத்தில், “நான் அரசியலுக்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அரசியலுக்கு வருவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. அரசியலில் ஈடுபட வேண்டிய கட்டாய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளேன். இன்று காலை 10 மணிக்கு வீடியோ மூலம் முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.

அந்தவகையில் தற்போது தான் அரசியலுக்கு வருவது தொடர்பாக வீடியோ வெளியிட்டிருக்கும் லாரன்ஸ், “

ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ்

அந்த பதிவில், “எந்தவொரு பிரதிபலனையும் எதிர்பார்க்காமல், உங்கள் கடமையை உண்மையோடு செய்யுங்கள்.

இந்த வீடியோவைப் பார்த்த பிறகு, உங்கள் ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் கருத்துகளில் பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் “வேண்டாம்” என்று கூறினால், நான் அரசியலில் ஈடுபடாமல் சமூகத்திற்கு எனது சுயநலமற்ற சேவையைத் தொடர்வேன்.

ஆனால் நீங்கள் “ஆம்” என்று கூறினால், நான் அரசியலில் நுழையத் தயாராக இருக்கிறேன். உங்கள் அனைவரின் ஆசிகளுடன், இந்த பயணத்தை நான் எப்போது மற்றும் யாருடன் தொடங்க உத்தேசித்துள்ளேன் என்பதை வெளிப்படுத்துவேன்” என்று வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *