நீட் போராட்டம் குறித்து முக்கிய முடிவு…பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ….! – Kumudam

Spread the love

நீட் வினாத்தாள் முறைகேடுக்கு எதிராகவும் அதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக  வேண்டியும் கரப்பான் பூச்சி கட்சி  சார்பாக டெல்லியில் ஜந்தர்  மந்தரில் 20 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடைப்பெற்று வருகிறது.

தற்போது இந்த போராட்டத்தில் இந்தியா கூட்டணியும் இந்த விவகாரத்தில் கையில் எடுத்து நாடாளுமன்றத்தில் பதவி  விலகலுக்கான வலியுறுத்தல்கள் தினந்தோறும் வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிஜேபி போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி நள்ளிரவில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்

நமது இளைஞர்களின் நலனையும் எதிர்காலத்தையும் விட முக்கியமானது வேறு எதுவும் இல்லை. வினாத்தாள் கசிவில் ஈடுபட்டவர்கள் மீது விரைவில் கடுமையான தண்டனையை உறுதி செய்வதாக  கூறியுள்ளார். இது தொடர்பாக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளோம்.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றும் தேர்வு முறையை மாற்றியமைப்பது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கூறியுள்ளார். வினாத்தாள் கசிவு குறித்து விசாரிப்பதற்காக விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து நீட் வினாத்தாள் கசிவைத் தடுப்பதற்கான  மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் வினாத்தாள் கசிவைத் தடுப்பதற்கான மசோதாவை விரைந்து நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *