அதன் மூலம் மனிதர்களின் இயல்பு எப்படிப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ளலாம். அந்த ரோபோட் கதாபாத்திரம் மிக முக்கியமான ஒன்று. உண்மையான வாழ்க்கையில் நாம் வெளிப்படுத்த முடியாத பல எதிர்மறையான உணர்வுகள் நமக்குள்ளும் இருக்கும்.
இந்த மாதிரி வாய்ப்புகள் கிடைக்கும்போது அதை நடிப்பில் வெளிப்படுத்துவது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். நெகட்டிவ் ரோல் பண்ணுவதில் ஒரு தனி ஜாலி இருக்கிறது. அதற்கு எந்த எல்லைகளும் கிடையாது, நாம் எப்படி வேண்டுமானாலும் நடித்து எக்ஸ்பெரிமென்ட் பண்ணலாம்.
‘மௌன ராகம்’ பண்ணும்போது வயதானவர்கள் மட்டும், ‘ஏன் அந்த குழந்தைகளை இப்படிப் படுத்துறீங்க?’ என்று திட்டினார்கள்.

ஆனால் குட்டீஸ் எல்லாம் ‘சூப்பர் மேம்’ என்பார்கள்” என்றவர், “‘பொன்னூஞ்சல்’ சீரியலுக்குப் பிறகு இப்போது மீண்டும் விஷ்வா சாருடன் இணைந்து நடிக்கிறேன். முதலில் இதை என்னால் நம்பவே முடியவில்லை.
இப்போதெல்லாம் சீரியல் சூழல் நிறைய மாறிவிட்டதால் அவர் ஒப்புக்கொள்வாரா என யோசித்தேன். ப்ரோமோ ஷூட்டின் போது ‘நீங்க நிஜமாவே பண்றீங்களா?’ என்று கேட்டதற்கு, ‘ஏன் நான் பண்ணக்கூடாதா?’ என்று ஜாலியாகக் கேட்டார்” என்றார்.