கஞ்சா மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழரசன் பணிபுரிந்த பேரூரணி சிறையில் அவருடன் பழகிய கைதிகள், நண்பர்களிடம் சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தமிழரசனுக்கு கஞ்சா கடத்தல் கும்பலில் வேறு யார் யாருடன் தொடர்பு உள்ளது.
இதுவரை எவ்வளவு காலமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தார், இதில் வேறு சிறை ஊழியர்களுக்குத் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரிக்க அவரைக் காவலில் எடுக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

பின்னர் இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், நெல்லை சரக சிறைத்துறை எஸ்.பி., செந்தாமரைக் கண்ணன் தலைமையிலான 75-க்கும் மேற்பட்ட போலீஸார் பேரூரணி சிறையில் சோதனை நடத்தினர்.
200-க்கும் மேற்பட்ட கைதிகளின் அறைகள், சமையலறை, பொருட்கள் வைப்பறை, பதிவேடுகள் அறை, கழிவறை, கண்காணிப்பு கோபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் சோதனை நடத்தினர். ஆனால், எந்தவிதமான போதைப் பொருளும் சிக்கவில்லை. சிறைவார்டன் தமிழரசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.