சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் பேசி, மீதமுள்ள நாட்களில் நேரலை தடையின்றித் தொடர உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அவையில் எவ்வித வன்முறையும் நடக்கவில்லை.
பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களில் அரசியல் தலைவர்களின் படங்களை மாட்டுவதற்குப் பதிலாக, நம் மண்ணின் மைந்தர்களான ஏ.பி.ஜே. அப்துல் கலாம், இஸ்ரோ சிவன், மயில்சாமி அண்ணாதுரை போன்ற விஞ்ஞானிகள் மற்றும் சாதனையாளர்களின் படங்களை மாட்ட வேண்டும். அதை விடுத்து அரசியல் கட்சித் தலைவர்களின் படங்களை எந்தக் கட்சியினரும் மாட்ட வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அப்போதுதான் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் மகிழ்வார்.” என்றார்.