“பஞ்சாப் அணி பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் சிறந்தவர்கள்” – ஹர்திக் பாண்டியா | Hardik Pandya has spoken in detail about reasons for defeat against pbks

Spread the love

ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல் 16) நடைபெற்ற மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்று 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. ஆனால் தொடர்ந்து நான்கு தோல்விகளின் மூலம் ஒன்பதாவது இடத்திலேயே தொடர்கிறது மும்பை அணி.

இந்தத் தொடர்ச்சியான தோல்வி குறித்து மும்பை கேப்டன் ஹார்டிக் பாண்டியா, “உண்மையாகச் சொன்னால், இப்போதைக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. நாங்கள் மீண்டும் ஆரம்ப நிலைக்குத் திரும்பி, எங்கே தவறுகிறோம் என்பதைப் பார்க்க வேண்டும். அது தனிப்பட்ட நபர்களாலா? அணியாகவா? திட்டமிடலிலா? இவற்றை எல்லாம் புரிந்துகொண்டு, அடுத்ததாக என்ன செய்யலாம் என்று தீர்மானிக்க வேண்டும். எதிரணிக்கும் பாராட்டு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா

பந்து ரிவர்ஸ் ஆகத் தொடங்கியது. இரண்டாவது இன்னிங்ஸில் பனித்துளி வந்ததால் சற்று எளிதானது. ஆனாலும், அதை விட முக்கியமாக அவர்கள் எங்களை விட சிறப்பாக விளையாடினர். அவர்கள் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் சிறந்தவர்கள். ஃபீல்டிங்கிலும் நிச்சயமாகச் சிறப்பாகச் செயல்பட்டார்கள்.

இது நமக்கு மீண்டும் சிந்திக்க வைக்கும் விஷயம். கடினமான முடிவுகளை எடுக்க வேண்டுமா? அல்லது இதேபோலத் தொடர்ந்து நம்பிக்கையுடன் இருந்து நிலையை மாற்ற முடியுமா? இவை எல்லாம் கடினமான கேள்விகள். ஆனால் இறுதியில், அதற்கான பதிலை நாங்களே கண்டுபிடிக்க வேண்டும். அதற்கான பொறுப்பையும் நாங்களே ஏற்க வேண்டும்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *