பதவியேற்ற செ.ம.வேலுசாமி, புறக்கணித்த எஸ்.பி.வேலுமணி – கோவை அதிமுகவில் தொடரும் மோதல்!

Spread the love

சரிந்த எடப்பாடி போட்டோ!

இந்த நிலையில் இன்று காலை கோவை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளராக செ.ம.வேலுசாமி பொறுப்பேற்றுக் கொண்டார். அவிநாசி சாலையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், அ.தி.மு.க. மாவட்ட அலுவலகமான இதய தெய்வம் மாளிகைக்கு வந்தார். அங்கு செ.ம.வேலுசாமி முறைப்படி புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளராக பதவியேற்றார். இதையடுத்து அ.தி.மு.க-வினர் அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது அங்கிருந்த சுவர் கடிகாரம் சரிந்து தொண்டர்கள் மீது விழுந்த நிலையில், உடனடியாக அது அகற்றப்பட்டது. இதேபோல எடப்பாடி பழனிசாமியின் போட்டோவும் சரிந்தது. இருப்பினும் அதை அகற்றாமல், மீண்டும் வைக்குமாறு செ.ம.வேலுசாமி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகர் மாவட்டச் செயலாளர் அம்மன் அர்ச்சுணன், வடக்கு மாவட்டச் செயலாளர் பி.ஆர்.ஜி. அருண்குமார், முன்னாள் அமைச்சர்கள் செ.தாமோதரன், பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதேசமயம் எஸ்.பி. வேலுமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர். அணிகள் இணைந்தாலும், மனங்கள் இணையாததே எஸ்.பி. வேலுமணி டீம் புறக்கணிப்பிற்கு காரணம் என கூறப்படுகிறது.

செ.ம.வேலுசாமி

செ.ம.வேலுசாமி

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *