பதவியைவிட கொள்கை பெரிது: ஹோமியோபதி மருத்துவர் அன்னை சத்தியவாணி முத்துவின் போராட்ட வரலாறு | The Inspiring Legacy of Annal Satyavani Muthu, India’s First Dalit Woman Union Minister

Spread the love

திமுக-வின் முதல் பெண் அமைச்சராக, 1967-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அமைச்சரவையில் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் செய்தித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்தபோது, ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்கள் கல்வி கற்க ஏதுவாக 1973-ஆம் ஆண்டு 500-க்கும் மேற்பட்ட இலவச மாணவர் விடுதிகளை உருவாக்கினார்.

அண்ணாவின் மறைவுக்குப் பின் கலைஞர்.மு.கருணாநிதி அமைச்சரவையிலும் 1974-ஆம் ஆண்டு வரை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராகத் தொடர்ந்தார். 

அதே ஆண்டு, திமுக ஆட்சியில் தலித் மக்களின் நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாகச் செலவிடப்படவில்லை என்று கூறி, சட்டமன்றத்திலேயே தனது கட்சியின் முதலமைச்சரான கருணாநிதியுடன் எதிர்த்து விவாதம் நடத்தினார். “ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடவே நான் அமைச்சரானேன். அது நடக்காதபோது எனக்கு இந்தப் பதவி தேவையில்லை” என்று கூறி, தனது அமைச்சர் பதவியையும், 25 ஆண்டுகால திமுக உறுப்பினர் பதவியையும் அதிரடியாகத் துறந்தார். கொள்கைக்காகப் பதவியைத் தூக்கி எறிந்த அவரது துணிச்சல் பலரையும் வியக்க வைத்தது.

திமுக-விலிருந்து விலகி, ‘தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம்’ என்ற சொந்தக் கட்சியைத் தொடங்கினார். பின்னர் 1979-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுகவில் இணைந்தார். 1979-ஆம் ஆண்டு சரண் சிங் மத்திய அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று, இந்தியாவின் முதல் தலித் பெண் மத்திய அமைச்சர் என்ற வரலாற்றுப் பெருமையைப் பெற்றார்.

126 நாட்கள் மட்டுமே நீடித்த இந்த அமைச்சரவையில், குறுகிய காலத்திற்குள் தேசிய அளவில் ஒடுக்கப்பட்ட மற்றும் அடித்தட்டு மக்களின் கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை மேம்படுத்தும் கொள்கை ரீதியான முன்னெடுப்புகளைச் செய்தார். சமூக நலத்துறையின் கீழ் நாடு முழுவதும் உள்ள கிராமப்புற ஏழைப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் சுயதொழில் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்கினார். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *