பழனி தண்டாயுதபாணி கோவிலுக்குச் சொந்தமான 1 ஏக்கர் 40 செண்ட் நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்ய முயன்ற வழக்கில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிமண்டன், நிலத்தை விற்ற முருகதாஸ், வாங்கிய வெள்ளதுரை சேதுபதி ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், மாவட்ட பதிவாளர் சசிகலாவும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில் சஸெண்ட் செய்யப்பட்ட சார்பதிவாளர் முன்ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று மதுரை நீதிமன்ற நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.