தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்திருக்கிறார்.
சென்னை எழும்பூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஜி.கே. வாசன், “மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, மாநிலத்தில் அதிமுக கூட்டணியிலிருந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி விலகுகிறது.
தமிழ் மாநில காங்கிரஸ் தொடங்கி 12 ஆண்டுகள் ஆகியும் எங்களுடைய நோக்கம் இன்னும் நிறைவேறவில்லை. சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற முடியவில்லை.