டிரேடிங்கில் உள்ள சிக்கல்கள்!
தற்போது மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மூன்று தரப்பினரும் இதுவரை எதையும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், பலவிதமான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன. இது முழுக்க முழுக்க பணப் பரிமாற்றமாக இருக்குமா? அல்லது சிஎஸ்கே எந்த வீரரை விட்டுக் கொடுக்கும்? கொல்கத்தா அணியிடம் வர்த்தகம் செய்யக்கூடிய மதிப்புமிக்க வீரர்கள் இருக்கிறார்களா? அல்லது கடந்த ஆண்டு கே.எல். ராகுல் விஷயத்தில் ஏற்பட்டது போன்ற இழுபறி நீடிக்குமா? எனப் பல கேள்விகள் எழுந்துள்ளன.
கடந்த சீசனில் சஞ்சு சாம்சன், ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் சம்பந்தப்பட்ட பிளாக்பஸ்டர் டிரேடிங்கின் போது சிஎஸ்கே எப்படித் திட்டமிட்டு நுழைந்ததோ, அதேபோல பாண்ட்யா விஷயத்திலும் சரியான நேரத்திற்காகக் காத்திருந்து காய்நகர்த்தியுள்ளது. சிஎஸ்கே இதனை சாத்தியப்படுத்தும் நிலையில், இந்த டிரேடிங்கின் போக்கையே அது மாற்றக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
பாண்ட்யாவின் விருப்பமும், மும்பையின் நெருக்கடியும்!
எல்லாவற்றையும் விட வீரரின் சம்மதம் மிகவும் முக்கியமானது. கேப்டன் பதவி இல்லாத ஒரு அணிக்குச் செல்ல பாண்ட்யா சம்மதிப்பாரா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. இப்போதைக்கு எந்தத் தரப்பிலிருந்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரவில்லை என்றாலும், இந்த டிரேடிங் குறித்த தெளிவான நிலவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.