பாலிவுட் திரையுலகில் நிலவும் அசாத்தியமான சூழல்கள் மற்றும் “பாலிவுட் மாஃபியா” (Bollywood Mafia) குறித்தும், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மற்றும் நடிகை ஜியா கான் ஆகியோரின் மரணங்களுக்குப் பின்னால் இருக்கும் மர்மங்கள் குறித்தும் நடிகை தனுஸ்ரீ தத்தா மீண்டும் விவாதத்தைத் தொடங்கியிருக்கிறார்.
சமீபத்தில் “மேரி சஹேலி’ (Meri Saheli) இதழுக்கு அளித்த பேட்டியில், தனுஸ்ரீ தத்தா எவ்வித ஒளிவுமறைவுமின்றிப் பேசியிருக்கிறார். அதில், “பாலிவுட்டில் மாஃபியாக்கள் இருப்பது முற்றிலும் உண்மை. அதனால்தான் இன்று ஜியா கானும் சுஷாந்த் சிங் ராஜ்புத்தும் நம்மிடையே இல்லை.

அப்படி ஒரு மாஃபியா கும்பல் இல்லையென்றால், திறமையான இந்த வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் இன்று உயிருடன் இருந்திருப்பார்கள். அவர்கள் பெரும் துயரத்தில் இருந்தார்கள் என்பது வெளியே சொல்லப்படாத விஷயம். அவர்கள் தற்கொலை செய்துகொண்டார்கள் என்பதை நான் நம்பவில்லை. ஒருவேளை தற்கொலைதான் என்று வைத்துக்கொண்டாலும், ஒரு மனிதன் அந்த நிலைக்குத் தள்ளப்படுவது ஏன்?