”பிரச்னை வரும்போது ரீல்ஸ் போட்டு மக்களை டைவர்ட் செய்கிறார் முதல்வர்” – உதயநிதி ஸ்டாலின் சாடல் | cm diverts people by posting Reels whenever a problem arises” – Udhayanidhi lashes out

Spread the love

திருட்டு லாட்டரி விற்கிற ஒரு அமைச்சர், திருட்டு விசிடி விற்ற அமைச்சர், ப்ளாக் டிக்கெட் விற்ற அமைச்சர், உருடுகட்டையுடன் திரியும் அமைச்சர், போதைப்பவுடர் அமைச்சர் என மொத்த கேபினட்டும் ஒரு ஜோக்கர் கூட்டமாக உள்ளது. இந்த ஆட்சியில் முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ரீல்ஸ் போடுகின்றனர்.

ஸ்கூல், ஹாஸ்பிட்டல் டாய்லெட்டைக் கூட விட்டு வைக்காமல் ரீல்ஸ் போடுகின்றனர். இரண்டு அமைச்சர்கள் அவர்கள் மாவட்டத்தின் உள்ள பள்ளிகளுக்குச் சென்று கட்சி பெயரைக் கோஷம் போடச் சொல்லி ரீல்ஸ் போட்டுள்ளனர். இதுமாதிர் கேடுகெட்ட ஆட்சியை தமிழ்நாடு இதுவரை பார்த்ததில்லை.

சென்ற மாதம் தென்காசியில் நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் தீபிடித்து எரிந்துள்ளது. ஆளும் கட்சியின் மாவட்டச் செயலாளர் நான்கு கேமராவுடன் சென்று செட் செய்து படம் பிடித்து பேக்ரவுண்ட் மியூசிக் போட்டு ரீல்ஸ் போட்டார்.

இப்படி ரீல்ஸ் போடுற ஆட்சியை தமிழ்நாடு இல்ல, இந்தியாவே பார்த்தது கிடையாது. அமைச்சர்கள் மட்டுமல்ல அவர்களின் அண்ணன் தம்பிகள் ஆய்வுக்குச் செல்கின்றனர். அதிகாரிகளுக்கு மட்டுமல்ல முதல்வருக்குக்கூட யார் அமைச்சர் என்று தெரியவில்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *