அதில் மாளவிகா மோகனன், “கடந்த மாதம் வேலை விஷயமாக நான் சென்னையில் இருந்தேன். நீண்ட காலம் நம்முடைய வீடு, குடும்பம் மற்றும் அன்புக்குரியவர்களைப் பிரிந்து இருப்பது ஒரு கட்டத்தில் மிகுந்த தனிமை உணர்வைத் தரத் தொடங்கும்.
நாள் முழுவதும் உழைத்துவிட்டு, அன்றைய பொழுதின் இறுதியில் பேசுவதற்கு ஆள் இல்லாத ஒரு வெற்று ஹோட்டல் அறைக்குத் திரும்புவது ஒரு கட்டத்தில் என் மனதைப் பாதிக்கத் தொடங்கியது என்று நினைக்கிறேன்.
இது ஏதோ ஒரு சினிமாத்தனமான காட்சி அல்ல. சத்தமாக அழுது ஆர்ப்பாட்டம் செய்வது போன்ற ஒன்றல்ல. இது மிகவும் மௌனமான, ஆழமான உணர்வுப்பூர்வமான ஒரு விஷயம்.
நான் ஏதோ கதறி அழுதேன் என்றெல்லாம் இல்லை, ஆனால் அப்போது ஒருவிதமான மனச்சோர்வுக்கு உள்ளானேன்.” எனத் தெரிவித்திருக்கிறார்.