Cricket
oi-Yogeshwaran Moorthi
நாட்டிங்ஹாம்: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டியை நேரில் காண இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தோனி நேரில் வந்துள்ளார். அவரது 45வது பிறந்தநாளை கொண்டாடி வரும் சூழலில், தல தரிசனம் கிடைத்துவிட்டதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நாட்டிங்ஹாம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதன்பின் இங்கிலாந்து அணிக்காக பட்லர் – பில் சால்ட் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரை மெய்டன் செய்தார்.

இதன்பின் அதிரடியாக ஆடிய பட்லர் 21 பந்துகளில் 36 ரன்கள் எடுத்திருந்த போது, பிரின்ஸ் யாதவ் வீசிய பந்தில் போல்டாகி வெளியேறினார். தொடர்ந்து வந்த கேப்டன் ஹாரி ப்ரூக்கும் 12 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒரு முனையில் சால்ட் அதிரடி காட்டினாலும், மறுமுனையில் எந்த வீரரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
ஜேக்கப் பெத்தல், டாம் பேண்டன் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் இங்கிலாந்து அணி 12 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் இந்தப் போட்டியை நேரில் பார்க்க இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தோனி மைதானத்திற்கு வந்துள்ளார்.
தோனி இன்று தன்னுடைய 45வது பிறந்தநாளினை கொண்டாடி வருகிறார். பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக லண்டன் வந்துள்ள அவர், இந்தப் போட்டியை தனது நண்பர்களுடன் வந்திருக்கிறார். தோனியை நேரலையில் பார்க்க ரசிகர்கள், பிறந்தநாளன்று தல தரிசனம் கிடைத்துவிட்டதாக கொண்டாடி வருகின்றனர்.
ஏற்கனவே விம்பிள்டன் போட்டியையும் தோனி பார்த்திருந்தார். அதுமட்டுமல்லாமல் விராட் கோலியையும் தோனி சந்தித்திருந்தார். கடந்த சில ஆண்டுகளாகவே தோனி தனது பிறந்தநாளினை வெளிநாடுகளில் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் இம்முறை லண்டனில் கொண்டாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.