இதுவும் பி.டி.ஆர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அதன்பிறகான ஆண்டுகளில்தான் வருவாய் உபரியே இல்லாமல் வருவாய் பற்றாக்குறையை நோக்கிய தொடர் பயணத்தை தமிழகம் தொடங்கியிருக்கிறது.
அதேமாதிரி, கொரோனாவுக்கு முன்பாகவே 2019 – 20 ஆண்டிலயே தமிழகம் கிட்டத்தட்ட 35,000 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறையை எட்டிவிட்டது. 2021 இல் திமுக ஆட்சியிம் அமர்ந்த போது தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை 61,360 கோடி ரூபாய். இப்போது வெளியிட்டிருக்கும் வெள்ளை அறிக்கையின் படி தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை கிட்டத்தட்ட 78,000 கோடி.
2006 லிருந்து வெவ்வேறு ஆட்சிகளின் கீழ் தமிழகத்தின் நிதி நிலை எப்படி இருந்திருக்கிறது என்பதை பார்க்கும் போது குறுகிய அரசியல் விமர்சனங்களிலிருந்து வெளிப்பட்டு மாநிலத்தின் வளர்ச்சியையும் அதைச் சுற்றிய சமூக சூழல்களையும் புரிந்து கொள்ள முடிகிறது.

மரிய வில்சனின் வெள்ளை அறிக்கை!
ஆனால், அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டிருக்கும் வெள்ளை அறிக்கை தமிழகத்தின் அத்தனை நிதி இன்னல்களுக்கும் கடந்த 5 ஆண்டு திமுக அரசுதான் காரணம் என்பதைப் போல சுட்டிக்காட்டுகிறது. 2006-21 காலக்கட்டத்துக்கான நிதிநிலையை பி.டி.ஆர் தான் வெளியிட்டு விட்டாரே? நாம் ஏன் மீண்டும் வெளியிட வேண்டும் என தவெக கூட்டணி அரசுக்கு ஆதரவானவர்கள் வாதிடலாம்.
ஆனால், வெள்ளை அறிக்கை என்பதை வெறும் எண்ணாக மட்டுமே பார்க்க முடியாது அல்லவா. அப்படி பார்க்க வேண்டுமெனில், கடந்த 5 ஆண்டு பட்ஜெட்களையும் முழுமையாக உட்காந்து பார்த்திருந்தாலே போதும் வெள்ளை அறிக்கையின் அத்தனை அம்சங்களையும் அதன் மூலமே நாம் பெற்றுவிட முடியும்.