இது தொடர்பான 4 நிமிட வீடியோ சமூக ஊடங்களில் பரவியது. உடனே சம்பவம் நடந்த இடத்திற்கு போலீஸார் வந்தனர். ஆனால் போலீஸாரிடம் அப்பெண் புகார் செய்ய மறுத்துவிட்டார். இது தங்களது தனிப்பட்ட விவகாரம் என்று கூறிவிட்டார். இதனால் போலீஸார் அப்பெண்ணை அடித்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இது தொடர்பான வீடியோ சமூக ஊடங்களில் வெளியானவுடன் நெட்டிசன்கள் கடுமையான விமர்சனம் செய்துள்ளனர். ஒருவர் வெளியிட்டுள்ள பதிவில், கடை உரிமையாளர் எங்கு சென்றார் என்றும், அவர் ஏன் போலீஸாரை அழைக்கவில்லை என்றும், அப்பெண்ணை அடிக்க யார் அவருக்கு அதிகாரம் கொடுத்தது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆனால் சிலர் பாதிக்கப்பட்ட பெண் மீதே தங்கள் கோபத்தை திருப்பினர். அப்பெண் ஏன் திருப்பித் தாக்கவில்லை என்றும், ஏன் சம்பவ இடத்தில் இருந்து ஓடிவிடவில்லை என்றும், பொதுவெளியில் தன்னை அடிக்கும் ஒருவருடன் ஏன் தொடர்ந்து இருக்கிறாள் என்றும் கேள்விகளை எழுப்பினர். ஆனால் ஒருவர் அப்பெண்ணை தாக்கியவருக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டுள்ளார். அவர், “அவருடைய வலியையும் விரக்தியையும் மட்டுமே என்னால் பார்க்க முடிகிறது. அவள் அமைதியாக இருக்கிறாள், ஏனென்றால் அவள் தன் தவறுகளை உணர்ந்திருக்கிறாள். இப்போதெல்லாம் பெண்கள் தங்களுக்கு ஒரு ஆண் தேவையில்லை என்பது போல இருக்கிறார்கள். நான் அவரை ஆதரிக்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார். அந்த நபரின் கருத்துக்குப் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.