பெட்ரோல், டீசல்: 10 நாட்களில் 3-வது முறையாக உயர்ந்த விலை! – விலைவாசி உயர்வால் பொதுமக்கள் அவதி! |The continuously rising fuel prices are shocking the general public.

Spread the love

ஈரான் போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, டெல்லியில் கடந்த இரண்டு வாரங்களில் மூன்றாவது முறையாக பெட்ரோல், டீசல் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த அதிரடி விலை உயர்வு நுகர்வோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 நாட்களில் மட்டும் எரிபொருள் விலைகள் உயர்த்தப்படுவது இது மூன்றாவது முறையாகும். தற்போதைய புதிய மாற்றத்தின்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 87 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 91 காசுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்தத் தொடர் உயர்வால், கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் பெட்ரோல், டீசல் விலைகள் ஒட்டுமொத்தமாக லிட்டருக்கு சுமார் 5 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பெட்ரோல் பங்குகள்

பெட்ரோல் பங்குகள்

முன்னதாக, கடந்த மே 15-ம் தேதி முதன்முதலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு 3 ரூபாய் வரை உயர்த்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து, மே 19-ம் தேதி மீண்டும் லிட்டருக்கு 90 காசுகள் வீதம் விலை அதிகரிக்கப்பட்டது. தற்போது மே மாதத்தில் ஏற்பட்டுள்ள இந்த மூன்றாவது விலை உயர்வு பொதுமக்களின் மாதாந்திர வரவு-செலவு கணக்குகளைப் பெரிதும் பாதித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *