பொன்மழை பொழியச் செய்த பெருந்தேவித் தாயார் சந்நிதியில் திருவிளக்கு பூஜை… கலந்துகொள்ள அழைக்கிறோம்! | vilakku poojai at amanjikarai varadharajaperumal temple

Spread the love

இத்தகைய பெருமையும் சிறப்பும் உடைய திருத்தலத்தில்தான் சக்திவிகடனும் ச்ரி வரதராஜ பெருமாள் திருக்கோயில் நிர்வாகமும் இணைந்து வரும் 24.7.26 வெள்ளிக்கிழமை அன்று திருவிளக்குபூஜை நடத்த இருக்கிறார்கள். ஆடி மாதம் அம்மன் மாதம் என்பார்கள். அப்படிப்பட்ட ஆடி மாதத்தில் அன்னை பெருந்தேவித்தாயார் குடிகொண்டிருக்கும் திருக்கோயிலில் நடைபெறும் விளக்குபூஜை வைபவத்தில் பங்குபெறுவது மிகவும் சிறப்பானது. நம் கவலைகளைத் தீர்ப்பது. வேண்டுதல்களை நிறைவேற்றுவது. எனவே வாய்ப்பிருக்கும் வாசகிகள் இந்த விளக்குபூஜை வைபவத்தில் கலந்துகொள்ளுங்கள். இதற்குப் பதிவு செய்தால் போதுமானது. (பதிவுக்குப் பின் வேறு எந்த உறுதிப்படுத்தும் செய்தியும் வராது என்பதால் கவலைப்பட வேண்டாம். நேரடியாக நிகழ்வு நடைபெறும் ஆலயத்துக்கு வந்துவிடலாம். விளக்கு பூஜை வைபவம் சரியாக மாலை 6 மணிக்குத் தொடங்கும்.

விளக்குபூஜை

விளக்குபூஜை

கலந்துகொள்ளும் வாசகியர் கவனத்துக்கு:

விளக்குப் பூஜையில் கலந்துகொள்ளும் வாசகியர், விளக்கு, விளக்கை வைப்பதற்கான தட்டு, மணி, பஞ்சபாத்திரம், உத்தரணி, கற்பூர ஆரத்தித் தட்டு ஆகியவற்றை எடுத்து வந்தால் போதுமானது. மற்றபடி பூஜைக்குத் தேவையான திரி, எண்ணெய், தாம்பூலப் பொருள்கள், நைவேத்தியம் முதலானவற்றை நாங்களே வழங்குகிறோம்.

அற்புதமான இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள விரும்பும் வாசகியர் இங்கு தரப்பட்டுள்ள link-ஐ பயன்படுத்தி உரிய விவரங்களைப் பூர்த்தி செய்து முன்பதிவு செய்யலாம் அல்லது கீழ்க்காணும் எண்ணில் தொடர்பு கொண்டு, உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் விவரங்களுடன் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள எவ்வித கட்டணமும் கிடையாது.

முன்பதிவுக்கு: 044-66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *