இதற்கு எதிர்வினையாற்றிய மம்தா பானர்ஜி, தங்களை விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க 5 பேர் கொண்ட சிறப்புக் குழுவை அமைத்துள்ளதுடன், முதற்கட்டமாக செய்தித் தொடர்பாளர் ரிஜு தத்தாவை 6 ஆண்டுகளுக்கு கட்சியிலிருந்து நீக்கியுள்ளது.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக மூத்த தலைவர் சோவன்தேப் சட்டோபாத்யாயை நியமிக்கக் கோரி கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் கையெழுத்திட்ட தீர்மான கடிதத்தை, மே 9 அன்று அபிஷேக் பானர்ஜி சபாநாயகருக்கு அனுப்பியிருந்தார். ஆனால், இதில் தங்களின் கையெழுத்துகள் போலியாகப் போடப்பட்டுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களான ரிதாப்ரதா பானர்ஜி மற்றும் சந்திபன் சாகா ஆகியோர் சட்டப்பேரவைச் செயலகத்தில் புகார் அளித்தனர்.

இந்த விவகாரத்தை மாநில குற்றப் புலனாய்வுத் துறை விசாரித்து வருகிறது. இது தொடர்பாக பகருல் இஸ்லாம், சந்திரநாத் சின்ஹா, அரூப் ராய், தபஸ் மைட்டி, நயனா பானர்ஜி, தபஸ் மொண்டல், சுபாசிஷ் தாஸ், தொராஃப் ஹொசைன் மொண்டல், தினேன் ராய், குணால் கோஷ், அப்துல் அசீஸ் டாக்டர், அப்துல் மதின் மற்றும் தௌசீஃபுர் ரஹ்மான் ஆகிய 13 எம்.எல்.ஏ-க்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் அரூப் ராய், பகருல் இஸ்லாம் மற்றும் சுபாசிஷ் தாஸ் ஆகிய மூன்று எம்.எல்.ஏ-க்கள் அந்தத் தீர்மானத்தில் இருப்பது தங்களது கையெழுத்து அல்ல என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, சி.ஐ.டி அமைப்பு அபிஷேக் பானர்ஜிக்கு நோட்டீஸ் அனுப்பி, கட்சியின் தீர்மான புத்தகத்துடன் திங்கட்கிழமை நேரில் ஆஜராக உத்தரவிட்டது. ஆனால், உடல்நலக் குறைவைக் காரணம் காட்டி அபிஷேக் பானர்ஜி தனது வழக்கறிஞர் மூலம் கூடுதல் அவகாசம் கோரியுள்ளார்.