‘மகளிர் உரிமைத்தொகை திட்டம் இருக்கும்வரை நான்தான் முதலமைச்சர்; அப்பாவை அங்க தேடாதீங்க.!’- ஸ்டாலின் பதிலடி| dmk leader stalin slams cm vijay criticism

Spread the love

திருவாரூர் மாவட்டம் காட்டூரில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டிருக்கிறார்.

அப்போது விழா மேடையில் பேசிய அவர், “நாட்டில் மின்வெட்டுப் பிரச்னை, டெல்டா மாவட்டத்தில் குறித்த நேரத்தில் விவசாயிகளுக்கு தண்ணீர் திறக்க முடியவில்லை என்பன போன்ற பிரச்னைகள் உள்ளன.

கடந்த ஐந்து ஆண்டுகளில் நாம் குறித்த நேரத்தில் மேட்டூர் அணையைத் திறந்து வைத்துள்ளோம். இவற்றையெல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் எடுத்துச் சொல்லிப் பேசினார்.

மு.க. ஸ்டாலின்

மு.க. ஸ்டாலின்

ஆனால் முதலமைச்சராக உள்ளவர் எங்கே உங்கள் அப்பாவைக் காணோம் என்று கதை சொல்லியிருக்கிறார். அப்பாவை அங்கு தேடாதீர்கள். மக்கள் மனதில் இருக்கிறேன் அதுபோதும்.

நீங்கள் தேடும் இடத்தில் நான் இருக்க மாட்டேன். மக்கள் தேடும் இடத்தில் நிச்சயம் முதல் ஆளாக இருப்பேன். சட்டமன்றத்தில் நான் இல்லாவிட்டாலும் இன்றைக்கு நான் மக்கள் மன்றத்திலே இருக்கிறேன் என்பதைத் தெரிவித்துகொள்கிறேன்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *