எழில் கேத்தரீனுடைய சகோதரி எழில் கரோலின், வி.சி.க-வின் மாநில துணைப் பொதுச் செயலாளராக பொறுப்பில் இருக்கிறார். நடந்து முடிந்த தேர்தலில், அரக்கோணம் தொகுதியில் வி.சி.க சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் எழில் கரோலின். அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் மூலமாகவும் சீட்டுக்கு முயற்சி செய்யும் எழில் கேத்தரீன், தன்னுடைய சகோதரி எழில் கரோலின் மூலமாக வி.சி.க தலைவர் திருமாவளவனை பிடித்து, அவருடைய சிபாரிசையும் எதிர்பார்த்திருக்கிறார்.

தற்போது, வி.சி.க., கம்யூனிஸ்ட்டுகள், ம.தி.மு.க., ஐ.யூ.எம்.எல் என வலுவான கூட்டணி த.வெ.க-வுக்கு அமைந்திருக்கும் சூழலில், கட்சியின் சார்பாக மதுராந்தகத்தில் யார் போட்டியிட்டாலும் வெல்லக்கூடிய சூழல்தான் நிலவுகிறது. ஆகவே, எப்படியாவது மீண்டும் வாய்ப்பு பெற்றுவிட காய்நகர்த்துகிறார் எழில் கேத்தரீன்.