மதுரை: ஆம்னி பேருந்தும் அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து; ஐந்து பேர் பலியான சோகம் | Madurai collision between omni bus and government bus; five people killed in tragedy

Spread the love

சென்னையில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து திடீரென தனது கட்டுப்பாட்டு இழந்து நடுவில் உள்ள தடுப்பில் மோதி எதிர்திசையில் மதுரையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மீது பயங்கரமாக மோதியது.

அரசுப் பேருந்து மீது மோதிய வேகத்தில் மீண்டும் இடதுபுறம் வஞ்சிநகரம் கிராமத்தில் அமைக்கப்பட்டு இருந்த பயணிகள் நிழல்குடையில் மோதியது. ஆனால் நிழற்குடை சேதமானது.

இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்த நான்கு ஆண்கள், ஒரு பெண் உட்பட ஐந்து பேர் நிகழ்விடத்திலேயே பலியானார்கள்.

மேலும் இவ்விபத்தில் காயம் அடைந்த 41 பேர் மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

சரக டிஐஜி அபினவ் குமார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தேவநாதன் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்தில் பார்வையிட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *