மன்னர் சார்லஸை முந்திய பிராண்ட் மதிப்பு: 15,000 கோடி சொத்துடன் கலக்கும் பெக்காம் தம்பதி!

Spread the love

விளையாட்டு உலகிலும் பேஷன் உலகிலும் முடிசூடா மன்னர்களாக வலம் வரும் டேவிட் பெக்காம் மற்றும் விக்டோரியா பெக்காம் தம்பதி, தற்போது நிதித்துறையில் ஒரு மிகப்பெரிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளனர்.

2026-ஆம் ஆண்டின் சண்டே டைம்ஸ் பணக்காரர்கள் பட்டியலின்படி, இவர்களின் கூட்டுச் சொத்து மதிப்பு 1.185 பில்லியன் பவுண்டுகளை (இந்திய மதிப்பில் சுமார் 15,155 கோடி ரூபாய்) எட்டியுள்ளது.

இதன் மூலம் பிரிட்டன் வரலாற்றிலேயே பில்லியன் டாலர் சொத்து மதிப்பைத் தொட்ட முதல் விளையாட்டு வீரர் என்ற பெருமையை முன்னாள் கால்பந்து நட்சத்திரம் டேவிட் பெக்காம் பெற்றுள்ளார்.

இந்த அசாத்திய வளர்ச்சியால், பிரிட்டன் நாட்டு மன்னரான சார்லஸை விடவும் அதிக சொத்துக்களைக் கொண்டவர்களாக இந்தத் தம்பதி மாறியுள்ளனர்.

டேவிட் பெக்காம்

டேவிட் பெக்காம்

டேவிட் பெக்காமின் இந்த அசுர வேகப் பொருளாதார வளர்ச்சிக்கு அவர் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு தொடங்கிய தொழில்களே முக்கியக் காரணம் ஆகும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *