அதற்கு பதிலாக ஏற்கெனவே சொன்னது போல காங்கிரஸ் கட்சியின் இரண்டு பேருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளார்கள்.
இதற்கான பட்டியலை முதல்வர் இறுதி செய்துவிட்டார். இதுகுறித்து ஆளுநரிடம் பேசுவதற்காகவே முதல்வரின் முதன்மை செயலாளர் செந்தில் குமார், ஆளுநர் அர்லேக்கரை இன்று காலை சந்தித்தார்.
தமிழக அமைச்சரவை நியமனத்தை எப்போது வைத்துக் கொள்வது என ஆலோசனை நடந்தது. நாளை கேரள முதல்வர் பதிவியேற்பு விழா நடக்க இருப்பதால், அதை முடித்துவிட்டு வைக்கலாம் என ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.

இதனால் அமைச்சர்கள் குறித்த அறிவிப்பை எப்போது வெளியிடலாம், என முதல்வரிடம் பேசிவிட்டு வருவதாக செயலாளர் செந்தில் குமார் சொல்லியிருக்கிறார்”என்கிறார்கள்.
த.வெ.க வட்டாரத்தில் பேசிய போது,“ முதல்வருக்கு ராசியான எண் 10. அந்த எண்ணிற்கு தகுந்தது போலவே, அமைச்சவையும் இருக்கும். தற்போது பதவியேற்ற ஒன்பது பேரை தவிற, மேலும் பதினைந்து பேர் அமைச்சர்களாக பதிவியேற்பார்கள்.
கூடுதல் இடங்களை பிறகு நிரப்புவார்கள். மாவட்டத்திற்கு ஒருவர் அமைச்சர் என்கிற கணக்கில் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. சேலம் பார்த்திபன், புதுக்கோட்டை பர்வேஸ், தாஹிரா, மதுரையில் ஒருவர், துாத்துக்குடி ஸ்ரீநாத் உள்ளிட்டவர்கள் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ளது. கோவையில் பெண் ஒருவருக்கு அமைச்சராகும் வாய்ப்புள்ளது. இன்று இரவு இது குறித்த அறிவிப்பு வெளியாகலாம். ஆளுநர் முடிவை பொறுத்தே அறிவிப்பு வெளியாக உள்ளது ” என்கிறார்கள்.