மயிலாடுதுறை மாவட்டம், கூறைநாடு கடைவீதி பகுதியில் மதுபானக்கடை ஒன்று, சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டு வருகிறது
கூறைநாடு பகுதியானது பல்வேறு ஜவுளிக்கடைகள், திருமண மண்டபங்கள், பள்ளிக்கூடங்கள், மொத்த வியாபாரம் செய்யும் பெரிய கடைகள் முதல் சிறிய கடைகள் வரை பல்வேறு கடைகளை உள்ளடக்கிய மாவட்டத்தின் முக்கிய பகுதியாகும்.
கூறைநாடு பகுதியின் பேருந்து நிறுத்தத்துக்கு மிக அருகிலேயே அமைந்திருக்கும் மதுபானக்கடையால் பெரும் அச்சத்துடன் இருக்கும் பொதுமக்கள், பல்வேறு இடையூறுகளையும் அவ்வப்போது சந்திக்கின்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்களிடையே பேசியபோது, “இந்த டாஸ்மாக்க ஒட்டுன மாறித்தான் நாங்க பஸ்க்கு வெயிட் பண்ற இடம் இருக்கு. இந்த டாஸ்மாக் இல்லாதப்ப நாங்க எல்லாம் அங்கதான் பஸ் ஏற வெயிட் பண்ணுவோம்.
எப்ப இந்த டாஸ்மாக் வந்துச்சோ, அப்போவே இந்த பஸ்ஸ்டாப் குடிகாரர்களோட இடமாகிடுச்சு. நாங்க அந்த சைடு போறதே இல்ல. அங்கேயே கொஞ்சம் தள்ளிதான் பஸ் ஏற கால்கடுக்க நின்னுட்டு இருக்குறோம்.