அரசு விழாக்களில் மாநிலப் பாடலே முதலில் பாடப்பட வேண்டும் என உத்தரவிட்டு மத்திய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டுதலை வெளியிட்டிருக்கிறது.
இந்த அறிவிப்பின்படி, அரசு நிகழ்ச்சிகள் தொடங்கும் போது அந்தந்த மாநிலங்களின் மாநிலப் பாடலுக்குத்தான் முதல் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

அதனைத் தொடர்ந்து, நமது தேசியப் பாடலான “வந்தே மாதரம்’ இசைக்கப்பட வேண்டும். எல்லாவற்றிற்கும் நிறைவாக, இறுதிப் பகுதியாக தேசிய கீதமான ‘ஜன கண மன’ பாடப்பட வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.