திமுகவின் முப்பெரும் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கில் நடந்திருந்தது. இதில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் விஜய்யையும் தவெக அரசையும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.

மு.க.ஸ்டாலின் பேசியதாவது, “தம்பி உதயநிதி கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் மிசா, சர்க்காரியா கமிஷன் என சம்பந்தமே இல்லாமல் பேசுகிறார்கள். என்னுடைய மிசா கைதை உங்கள் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. என்னுடைய தியாகத்துக்கு மார்க் போட உங்கள் யாருக்கும் தகுதி கிடையாது.