மீன்கள் முதல் மனிதர்கள் வரை… துணைத் தேர்வில் காப்பி அடித்தல்! – ஒரு சுவாரஸ்யமான உளவியல் அலசல்| Decoding the Phenomenon of Mate Choice Copying in Biology and Sociology

Spread the love

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

இணைத் தேர்வில் நகலெடுத்தல் அல்லது பின்பற்றுதல் (Mate choice copying) என்பது ஒரு விலங்கு அல்லது மனிதன், மற்றொருவர் தேர்ந்தெடுக்கும் இணையைக் கண்டு, தானும் அதே நபரையும் அல்லது அதே போன்ற குணங்களைக் கொண்டவரையும் தனது இணையாகத் தேர்ந்தெடுக்க விரும்பும் ஒரு சமூகக் கற்றல் நடத்தை ஆகும்.

​உயிரியல், சமூகவியல் மற்றும் உளவியல் நோக்கில் இதைப் பற்றிய கட்டுரை இது..

​இயற்கையில் ஒரு துணையைத் தேர்ந்தெடுப்பது என்பது மிக முக்கியமான மற்றும் கடினமான முடிவாகும். ஒரு இணையின் தரம், ஆரோக்கியம் மற்றும் குணங்களை நேரடியாக மதிப்பீடு செய்ய அதிக நேரமும் ஆற்றலும் தேவைப்படும்.

​இந்தச் சிரமத்தைக் குறைக்க, உயிரினங்கள் மற்ற உயிரினங்களின் தேர்வை ஒரு “குறுக்குவழியாக” (Shortcut) அல்லது தகவலாகப் பயன்படுத்துகின்றன. இதையே “இணையத் தேர்வு நகலெத்தல்” என்று கூறுகிறோம். அதாவது, “அவர் அவரைத் தேர்ந்தெடுத்துள்ளார்; எனவே அவரிடம் ஏதோ சிறப்பு இருக்கிறது” என்ற எண்ணத்தில் உருவாகும் நடத்தை இது.

​நன்மைகள்:

​நேர மேலாண்மை: ஒருவரின் குணங்களை ஆராய நீண்ட காலம் எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக, சமூகத்தின் தேர்வை வைத்து விரைவாக முடிவெடுக்க முடிகிறது.

​தவறுகளைக் குறைத்தல்: மற்றவர்களின் அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்வதால், மோசமான இணையத் தேர்வைத் தவிர்க்க முடிகிறது.

​குறைபாடுகள்:

​சொந்த விருப்பமின்மை: பிறரின் ரசனையை அப்படியே நகலெடுப்பதால், தனக்கு உண்மையில் செட் ஆகாத ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் அபாயம் உள்ளது.

​செயற்கையான பிம்பம்: சமூகத்தில் ஒருவருக்கு இருக்கும் தவறான நல்ல பெயர் அல்லது போலி பிம்பத்தைப் பார்த்து ஏமாந்து போக வாய்ப்புள்ளது.

​இணைத் தேர்வு நகலெடுத்தல் என்பது பரிணாம வளர்ச்சியில் உயிரினங்கள் தப்பிப்பிழைக்கவும், சிறந்த இணையைக் கண்டறியவும் உருவாக்கிய ஒரு இயற்கையான உத்தியாகும். விலங்குகளில் இது வெறும் உடலியல் சார்ந்த தேர்வாக இருந்தாலும், மனிதர்களிடம் இது சுய சிந்தனை, பகுத்தறிவு மற்றும் சொந்த ரசனையோடு இணைந்து செயல்பட வேண்டிய ஒன்று. பிறரின் தேர்வை ஒரு குறிப்பாகக் கொள்ளலாமே தவிர, முடிவாகக் கொள்ளக் கூடாது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *