கடந்த மார்ச் 26-ம் தேதி, இந்தப் பிரச்சினை உச்சக்கட்டத்தை எட்டியது. மணப்பெண் வீட்டார் மணமகனின் வீட்டுக்குச் சென்று ஆபாசமாகத் திட்டியதோடு, அங்கிருந்த பி.என்.ஜி (PNG) எரிவாயு குழாயைச் சேதப்படுத்தி, ஒட்டுமொத்த குடும்பத்தையும் உயிரோடு எரிக்க முயன்றதாகப் புகார் எழுந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக, மணமகன் வீட்டார் போலீசாருக்குத் தகவல் கொடுத்ததால், அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்த விவகாரத்தில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நீதிமன்றத்தை நாடினர். நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, தற்போது போலீசார் மணப்பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.