சூர்யாவின் “விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருகிறது.
‘லக்கி பாஸ்கர்’ படப் புகழ் வெங்கி அத்லூரி இயக்கும் இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட சூர்யா சினிமாவிற்கு நடிக்க வந்தது குறித்துப் பேசியிருக்கிறார்.
“நான் சினிமாவிற்கு நடிக்க வருவேன் என்று எனக்கு தெரியவே தெரியாது. கேமராவுக்கு முன்னால் நிற்கப்போகிறேன் என்று ஐந்து நாள்களுக்கு முன்பு வரை எனக்கு தெரியாது. அதற்காக எந்தத் தயாரிப்பும் நான் செய்யவில்லை.