“முதல்வரின் உரையில் காவல்துறைக்கான எந்த அறிவிப்பும் இல்லை”- பிரேமலதா விஜயகாந்த்| dmdk premalatha vijayakanth about vijay speech

Spread the love

தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் இன்று நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “காவல்துறை மானியக் கோரிக்கையில் மிக முக்கியமானக் கோரிக்கைகளை வரும் என தமிழ்நாட்டில் உள்ள லட்சகணக்கான தமிழ் மக்கள் குடும்பத்துடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

பிரேமலதா விஜயகாந்த்

பிரேமலதா விஜயகாந்த்

ஆனால் இன்று முதல்வரின் உரையில் காவல்துறைக்கான எந்த அறிவிப்பும் இல்லை. அதை நான் அவையில் சுட்டிக்காட்டினேன். இன்று மாலை சட்டசபை முடிவதற்குள் ஒட்டுமொத்த காவல்துறையினருக்கும் ஒரு நல்ல அறிவிப்பு வெளியாக வேண்டும்.

அதாவது பதவி உயர்வு, சம்பள உயர்வு, காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களுக்கு நிரந்தர பதவி உயர்வு வழங்க வேண்டும். சைபர் க்ரைம் மிக மோசமாக நடந்துக்கொண்டிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *