முதல்வர் விஜய்யுடன் சந்திப்பு; ஆபரேஷன் ‘Toofan’ என்றால் என்ன? – கேரள அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா | what is Operation toofan, kerala minister ramesh sennithala speaks

Spread the love

கேரளாவில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் ‘ஆபரேஷன் Toofan’ குறித்து தமிழக முதலமைச்சர் விஜய்யுடன் கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னித்தாலா ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக தமிழ்நாடு மற்றும் கேரளா இணைந்து செயல்பட இருப்பதாகத் தெரிவித்தார்.

ஆபரேஷன் Toofan என்றால் என்ன?

கேரள காவல்துறை மாநிலம் முழுவதும் முன்னெடுத்து வரும் மிகப்பெரிய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையே ‘ஆபரேஷன் Toofan’ (Operation Toofan – The Narco Hunt) ஆகும். மாநில எல்லைகள், கடலோரப் பகுதிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் முக்கிய நகரங்களை மையமாகக் கொண்டு போதைப்பொருள் விற்பனை, கடத்தல் மற்றும் விநியோக வலையமைப்புகளை முறியடிப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.

ரமேஷ் சென்னிதாலா

ரமேஷ் சென்னிதாலா

இதுகுறித்து பேசிய ரமேஷ் சென்னிதாலா, கேரள அரசு போதைப்பொருட்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அதன் ஒரு பகுதியாக இதுவரை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

இது ஒரு மாநிலத்தின் பிரச்னை அல்ல.!

போதைப்பொருள் பிரச்சினை தற்போது ஒரு மாநிலத்திற்கு மட்டுப்பட்டதாக இல்லாமல், இந்தியா முழுவதும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது

மாநில எல்லைகள் வழியாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்க வேண்டிய அவசியம் குறித்து முதலமைச்சர் விஜய்யுடன் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், இதற்காக தமிழ்நாடு மற்றும் கேரள காவல்துறைகள் இணைந்து செயல்பட முதலமைச்சர் விஜய் உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், கேரள காவல்துறைக்கு கிடைக்கும் உளவுத்தகவல்கள் தமிழ்நாடு காவல்துறையுடன் பகிரப்பட்டு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *